அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. சமூகவலைதளங்களில் சூரப்பாவை நீக்குக, அண்ணா பல்கலையை காப்பாத்துங்க என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைப்பது தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தன்னிச்சையாக அவர் கடிதம் எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதில் மாநில அரசின் நிதி பங்கீடு இல்லாமல் கூட பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக திமுக., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட கண்டன அறிக்கையில், 'ஐந்து ஆண்டுகளில், அண்ணா பல்கலைக்கழகத்தால், 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதி பங்கீடு இல்லாமல், பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். எனவே, உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்' என, அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் எழுதப்பட்டிருப்பதில், முதல்வருக்கு உடந்தை இல்லை எனில், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், மாநில நிதி உரிமைக்கு விரோதமாகவும், மத்திய அரசுக்கு, தன்னிச்சையாக கடிதம் எழுதியுள்ள சூரப்பாவை, உடனே நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சமூகவலைதளங்களில் சூரப்பாவிற்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. ''சூரப்பாவின் இந்த முடிவால் இடஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்படும் என்றும், மாநில உரிமைகள் பறிக்கப்படும், மாணவர்களுக்கான பல சலுகைகள் பாதிப்படும்'' என தங்களது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #SaveAnnaUniversity, #Dismiss_Surappa ஆகிய ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகின.
சூரப்பா விளக்கம்
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த சூரப்பா, ''தனிப்பட்ட முறையில் மத்திய அரசுக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. மாநில அரசிடம் என்ன அறிக்கை சமர்ப்பித்தோமோ அதைத்தான் மத்திய அரசிற்கும் கடிதமாக எழுதினோம். உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடர்பு போன்ற பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். நிர்வாக ரீதியாக எந்த மாற்றமும் இருக்காது. மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு மாநில அரசின் கையில் உள்ளது. தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும்'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.