அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு - விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 11, 2020

Comments:0

அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு - விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செண்பக வள்ளி வெளியிட்ட அறிவிப்பு: டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆர்க்கிடெக்சுரல் அசிஸ்டன்ட்ஷிப், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினிரியரிங், எலக்ட்ரானிக்கல் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், என்விரான்மெண்டல் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங், கார்மென்ட் டெக்னாலஜி, கமர்ஷியல் பிராக்டீஸ் (வணிகவியல்) பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. 2020-21ம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் வருகிற 15ம் தேதிக்குள் உரிய சான்றிதழ், ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-22542013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். டிப்ளமோ பயில விரும்பும் மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி அரசின் விதிகளுக்கு உட்பட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு பயனடையலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews