CTET 2020: கொரோனா பாதிப்பு சீரான பிறகே சிடிஇடி தேர்வு நடத்தப்படும்- சிபிஎஸ்இ அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 10, 2020

Comments:0

CTET 2020: கொரோனா பாதிப்பு சீரான பிறகே சிடிஇடி தேர்வு நடத்தப்படும்- சிபிஎஸ்இ அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசிற்கு உட்பட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test) கொரோனா நிலைமை சீரான பிறகே நடத்தப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுத் தேர்விற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட நிலையில் ஜூலை மாதம் சிடெட் தேர்வு நடைபெறவிருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சிடிஇடி தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தேர்வு மீண்டும் எப்போது நடத்தப்படும் என விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கொரோனா நிலைமை சீரான பிறகே தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews