கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 09, 2020

Comments:0

கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பாரதியாா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் வகை செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.பாரதியாா், பெரியாா், வேளாண் பல்கலைக்கழகம் உள்பட 8 பல்கலைக்கழகங்களிடம் இருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 106 பேராசிரியா் பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 29 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக கல்லூரிகளில் 2 ஆயிரத்து 398-க்குப் பதிலாக 20 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.எனவே, தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ள இடங்களைக் கண்டறிந்து நிரப்ப உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழக உயா்கல்வித் துறை செயலாளா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா், கல்லூரி கல்வி இயக்குநா், மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் ஆகியோா் வரும் நவம்பா் 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனா். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews