அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளின் 487 இடைநிலை ஆசிரியர்கள் “டிரான்ஸ்பர்' - ஆசிரியர் சங்கம் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளின் 487 இடைநிலை ஆசிரியர்கள் “டிரான்ஸ்பர்' - ஆசிரியர் சங்கம் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஈராசிரியர் பள்ளிகளில் இருந்த இடைநிலை ஆசிரியர்களில் 2019 ஜூன், நவம்பர் கவுன்சிலிங் மூலம் மாறுதல் பெற்ற 487 பேர்களை உடனே, மாறுதல் பெற்ற பள்ளிக்கு அனுப்ப தொடக்க கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இதை ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.தமிழக அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 2019 ஜூன் மற்றும் நவம்பரில் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தி, மாறுதல் உத்தரவு வழங்கியது.தலைமை ஆசிரியர் உட்பட ஈராசிரியர் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்கள் 487 பேர் பணியிட மாறுதல் பெற்றனர். கொரோனா பரவல் இருந்ததால் இவர்களை பணியிட மாறுதல் பெற்ற பள்ளிக்கு அரசு அனுப்ப வில்லை.தற்போது 2019 ல் கவுன்சிலிங் மூலம் பணியிட மாறுதல் பெற்ற 487 இடைநிலை ஆசிரியர்களை உடனே அப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலியிடத்திற்கு, புதிய ஆசிரியர் நியமிக்கும் வரை பக்கத்து பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர் ஒருவரை மாற்றுப்பணியாக நியமிக்க வேண்டும் என தொடக்க கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஏ.ஜோசப் சேவியர் கூறியதாவது, அரசின் இந்நடவடிக்கையை வரவேற்கிறோம். இதை பல முறை சங்கம் சார்பில் அரசுக்கு வலியுறுத்தினோம். இதன் மூலம் ஆசிரியர் காலிபணியிடங்கள் நிரப்ப, கவுன்சிலிங் நடத்தப்படும். இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்குதீர்வு கிடைக்கும், என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews