மதிய உணவுடன் பால் வழங்க துணை ஜனாதிபதி பரிந்துரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 08, 2020

மதிய உணவுடன் பால் வழங்க துணை ஜனாதிபதி பரிந்துரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதிய உணவு திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு பால் சேர்த்து வழங்கவேண்டும் என்ற பரிந்துரையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்வைத்துள்ளார். நாடு முழுதும் உள்ள அரசு பள்ளிகளில், மத்திய உணவு திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது. வறுமையின் காரணமாக, பள்ளிக்கு வர இயலாமல், சிறு வயதிலேயே வேலைக்கு செல்லும் சிறுவர் - சிறுமியரை பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்கத்திலும், இந்த திட்டம், தமிழகத்தில் தான் முதன் முறையாக துவங்கப்பட்டது. இதையடுத்து, இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், இதர மாநிலங்களிலும், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பேசினார். அப்போது குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவுகளை மேம்படுத்தும் வகையில், காலை உணவு அல்லது மதிய உணவுடன் சேர்த்து பால் வழங்க வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மதிய உணவு திட்டத்தில், பால் சேர்த்து வழங்க, அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கும் என, துணை ஜனாதிபதிக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதிஅளித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews