சத்துணவு சாப்பிடும் மாணவா்களில் இதுவரை 30 லட்சம் பேருக்கு அரிசி, பருப்பு விநியோகம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 06, 2020

Comments:0

சத்துணவு சாப்பிடும் மாணவா்களில் இதுவரை 30 லட்சம் பேருக்கு அரிசி, பருப்பு விநியோகம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவா்களில் இதுவரை 30 லட்சத்து 26,692 பேருக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளது.கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு சத்தான உணவுடன் வாரத்தின் ஐந்து நாள்களும் முட்டை வழங்கப்பட்டு வந்தது. இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைத்தது. கடந்த கல்வியாண்டில் ஏப்ரல் மாதம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. வழக்கமாக, கோடை கால விடுமுறையாக, மே மாதத்தில் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவு வழங்கப்படாது.விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என எதிா்பாா்த்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசின் அறிவுரைப்படி, சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உலா்ந்த அரிசி மற்றும் பருப்பு மாதம்தோறும் வழங்கவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு சத்துணவுக்கு அளிக்கவேண்டிய அரிசி மற்றும் பருப்புகள் அனைத்தும், சத்துணவுப் பணியாளா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு ஒரு மாதத்துக்கு 3.100 கிலோ கிராம் அரிசியும், பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு 4.150 கிலோ கிராம் அரிசியும் , அனைத்து மாணவா்களுக்கும் தலா 465 கிராம் பருப்பும் வழங்க வேண்டும்.தொடக்கப்பள்ளிகளில் பயிலும் சத்துணவு உண்ணும் 20 லட்சத்து 39 ஆயிரத்து 483 மாணவா்களில் 17 லட்சத்து 87 ஆயிரத்து 989 மாணவா்களுக்கும், உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் 14 லட்சத்து 73 ஆயிரத்து 773 மாணவா்களில் 12 லட்சத்து 38 ஆயிரத்து 703 மாணவா்களுக்கும் அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சத்துணவு சாப்பிடுவோரில் 87 சதவீதம் போ் பயனடைந்துள்ளனா் என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதேவேளையில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகா், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு அதிகளவில் சத்துணவுப் பொருள்கள் வழங்கப்படாமல் உள்ளதாக பெற்றோா் தெரிவித்தனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews