அண்ணா பல்கலையில் செயல்பட்ட கொரோனா சிறப்பு மையம் மூடல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 13, 2020

Comments:0

அண்ணா பல்கலையில் செயல்பட்ட கொரோனா சிறப்பு மையம் மூடல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை அண்ணா பல்கலையில் அமைக்கப்பட்ட, கொரோனா சிறப்பு மையத்தில், ஐந்து நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்றதால், அது மூடப்பட்டுள்ளது.
சென்னையில், ஜூன் மாதம், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதை தொடர்ந்து, அனைத்து கல்லுாரிகளிலும், கொரோனா சிறப்பு மையம் அமைக்க, மாநகராட்சி உத்தரவிட்டது. இதற்காக, சென்னை அண்ணா பல்கலை விடுதியை ஒப்படைக்கவும், மாநகராட்சி உத்தரவிட்டது. மாணவர்களின் உடைமைகள் உள்ளதால் விடுதியை ஒப்படைக்க, பல்கலை நிர்வாகம் மறுத்தது. அதற்கு பதிலாக, வேறு கட்டடம் ஒதுக்கப்பட்டது. அங்கு, 1,300 படுக்கைகளுடன், கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது.தற்போது, சென்னையில் பாதிப்பு குறைய துவங்கியுள்ளது. தற்போது, ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 574 பேர் குணமடைந்து விட்டனர்; 2,350 பேர் இறந்துள்ளனர். 11 ஆயிரத்து, 130 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதில், முதல்நிலை தொற்றுடன் கூடிய, பெரிய அளவிலான பாதிப்பு இல்லாத, 5,000க்கும் மேற்பட்டோர், வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பல கொரோனா சிறப்பு மையங்கள், காலியாகி வருகின்றன.இதன்படி, சென்னை கிண்டி, அண்ணா பல்கலையில் இருந்த, சிறப்பு மையத்தில், ஐந்து பேர் மட்டுமே, சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள், ஐந்து பேரும், கிண்டி கிங் ஆய்வகத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலையின், கொரோனா சிறப்பு மையம் மூடப்பட்டுள்ளது. அங்குள்ள படுக்கை வசதிகள் அப்படியே இருக்கும் எனவும், தேவைப்பட்டால், மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்றும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews