ஓய்வூதியம் - வங்கியிலிருந்து 6 மாதத்திற்கு எடுக்காமல் இருப்பது திரும்ப பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் கருவூல கணக்குத் துறை ஆணையருக்கு கோரிக்கை - - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 18, 2020

Comments:0

ஓய்வூதியம் - வங்கியிலிருந்து 6 மாதத்திற்கு எடுக்காமல் இருப்பது திரும்ப பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் கருவூல கணக்குத் துறை ஆணையருக்கு கோரிக்கை -

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பதிவுண்5/200
TNGPA
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்
TAMILNADU GOVT. ALL DEPARTMENT PENSIONERS'ASSOCIATION
மாநில மையம்
எண் 22/32 F3 வேதவல்லி அடுக்ககம், ஆரிமுத்து (ஆ) தெரு,
திருவல்லிக்கேணி சென்னை - 600 005. போன் : 044-28444434
நாள்: 17-08-2020
பெறுநர்
உயர்திரு கருவூல கணக்குத் துறை ஆணையர் அவர்கள்,
நந்தனம், சென்னை - 600 035
மதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்.
பொருள் : ஓய்வூதியம் - வங்கியிலிருந்து 6 மாதத்திற்கு எடுக்காமல் இருப்பது திரும்ப பெறுவது - தொடர்பாக
பார்வை
! கருவூல ஆணையர் சென்னை கடிதம் எண். 45612/இ2/2018 நாள் 22-07-2020 கருவூல கணக்கு ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் முதல் வரியிலேயே தொடர்புடைய கருவூல விதியில் உள்ள சாராம்சங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஒரு ஓய்வூதியரின் வங்கிக் கணக்கில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்தால் அதனை கருவூலத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு அந்த ஓய்வூதியருக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படும். அந்த ஓய்வூதியரை நேரில் ஆஜராகவோ அல்லது உயிருடன் இருப்பதாக சான்றிதழ் சமர்ப்பிக்கும்படியோ கருவூல அலுவலர் கேட்டுக்கொள்வார். அப்படி சமர்ப்பிக்கும் பட்சத்தில் அல்லது நேரில் ஆஜராகும் பட்சத்தில் ஓய்வுதியம் தொடர்ந்து அனுப்பப்படும்.
Email:tngpa2013@gmail.com அப்படி வராத ஓய்வூதியர்கள் மற்றும் சான்றிதழ் வழங்காத ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையை வங்கிக்கணக்கில் நடவடிக்கை இல்லாத காலத்தில் வரவு வைக்கப்பட்ட ஓய்வூதியத்தை மாத்திரம் வட்டியுடன் திருப்பி அனுப்ப வங்கியை கருவூல அலுவலர் கோருவார். ஆனால் இந்த ஆண்டு மட்டும் ஓய்வூதியர் நேரில் ஆஜராவதில் இருந்தும் சான்றிதழ் வழங்குவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை இந்த நடைமுறையை கருவூல அலுவலர்கள் மேற்கொள்ள இயலாது. அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை கருவூல அலுவலர் எந்த ஓய்வூதியரையும் நேரில் ஆஜராகவோ உயிருடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கவோ கட்டாயப்படுத்த இயலாது. எனவே சுற்றறிக்கையின் படி யாராவது ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் ஓய்வூதியரை நேரில் வரச் சொல்வதோ அல்லது சான்றிதழ் வழங்க சொல்வதோ அரசால் வழங்கப்பட்ட விலக்குக்கு எதிரானதாகும். அதேபோலவே அந்த வங்கிக் கணக்கிலிருந்து ஓய்வூதியத்தை வட்டியுடன் திருப்பி அனுப்ப வங்கியை கோருவதும் தமிழக அரசால் இந்த ஆண்டு முழுவதும் வழங்கப்பட்ட விலக்குக்கு எதிரானதாகும். இதனை கணக்கில் கொண்டு கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களுடைய சுற்றறிக்கையை மாற்றி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews