பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 05, 2020

Comments:0

பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி கூறியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், பிளஸ்1 மாணவர்கள், பிளஸ் 2 மறு தேர்வர்கள் தங்களின் இணைய மதிப்பெண் பட்டியலை பள்ளியிலும், தேர்வெழுதிய மையத்திலும் இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS
அதேபோல், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு பிளஸ் 1 மாணவர்கள் ஆகஸ்ட் 5 முதல்12-ம் தேதி வரையும். பிளஸ் 2 மறுதேர்வர்கள் ஆகஸ்ட் 5, 6, 7-ம் தேதிகளிலும் பள்ளிகள், தேர்வெழுதிய மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற எல்லா பாடங்களுக்கும் 275ரூபாயும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் உயிரியல் பாடத்துக்கு 305ரூபாயும், இதர பாடங்களுக்கு 205ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews