பிளஸ் 1 தேர்வில் முதலிடம்..கோவை பள்ளிக்கல்விக்கு மகுடம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 01, 2020

Comments:0

பிளஸ் 1 தேர்வில் முதலிடம்..கோவை பள்ளிக்கல்விக்கு மகுடம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை மாவட்டம் முதன்முறையாக, பிளஸ் 1 ரிசல்ட்டில், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம், 98.10 சதவீத தேர்ச்சியோடு, மாணவர்களை விட, மாணவிகளே முன்னிலை வகித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த கையோடு, இப்போது பிளஸ் 1 தேர்வில் முதலிடம் கிடைத்துள்ளது. வரும் காலங்களிலும் இந்த சாதனை தொடர வேண்டும்!தமிழகம் முழுக்க, பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 4ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, இறுதித்தேர்வு மட்டும் நடத்தப்படவில்லை. இத்தேர்வுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. வந்தது ரிசல்ட்! நேற்று காலை 9:30 மணிக்கு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பெரும்பாலான மாணவர்களுக்கு, மொபைல் போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரங்கள் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பி வைக்கப்பட்டன.கோவை மாவட்டத்தில், 357 பள்ளிகளை சேர்ந்த, 34 ஆயிரத்து 247 மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 33 ஆயிரத்து 597 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 98.10 சதவீத தேர்ச்சி பெறப்பட்டுள்ளது. வழக்கம் போல், மாணவர்களை விட (மாணவர்கள்- 95.96 சதவீதம்), மாணவிகளே (மாணவிகள்- 98.50 சதவீதம்) அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், 197 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி என அனைத்து விதமான பள்ளிகளும், 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றிருப்பதால், மாநில ரேங்க் பட்டியலில் முதலிடம் பெற முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உதவிய வார, மாத தேர்வுகள்!கடந்தாண்டுகளை விட, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 இரு வகுப்புகளிலும், கோவை மாவட்டம், தேர்ச்சி விழுக்காடு, ரேங்க் பட்டியலில் முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் நடத்தப்பட்ட வார, மாதத்தேர்வுகளே. ஒவ்வொரு மாணவருக்கும், பிரத்யேக மதிப்பெண் விபர அறிக்கை பட்டியல் தயாரிக்கப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வரை, இப்பட்டியலில் மாணவர்களின் முன்னேற்ற நிலை கணக்கிடப்பட்டது. இதுவே, முதலிடம் பெற்றதற்கான காரணம். இதை வரும் கல்வியாண்டுகளிலும் பின்பற்றினால், கல்வித்தரம் உயரும் என்கின்றனர் ஆசிரியர்கள்.தோல்வி அடைந்தோர் யார்கொரோனா தொற்றால் இறுதித்தேர்வுக்கு, பள்ளித்தேர்வு மதிப்பெண்களே கணக்கிடப்பட்டன. இதில், வேதியியல் பாடத்தில் இருவர், புவியியல் பாடத்தில் ஒருவர், கணக்கு பதிவியல் பாடத்தில் 253 பேர் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளனர்.அதிகபட்சமாக கணக்கு பதிவியல் பாடத்தில், தோல்வியை தழுவிய 253 பேர், பள்ளிக்கு முறையாக வருகைபுரியவில்லை என கூறப்படுகிறது. இம்மாணவர்களின் விபரங்களை திரட்ட, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 'சிறப்பு கவனம் செலுத்தப்படும்' முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ''மாநில ரேங்க் பட்டியலில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வரும் ஆண்டுகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து, ரேங்க்கை தக்க வைத்து கொள்வதற்கான, மிகப்பெரிய சவால் உள்ளது. இம்மாணவர்கள் தற்போது பிளஸ்2 வகுப்பில் உள்ளதால், பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் ஆய்வு செய்யப்படும். மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் பல நிலைகளாக பிரித்து, சிறப்பு கவனம் செலுத்தப்படும்,'' என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews