போக்குவரத்து பிரச்னையால் எழுதாமல் போன மாணவர்களுக்கு பிளஸ்- 2 மறுதேர்வு தொடங்கியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 27, 2020

Comments:0

போக்குவரத்து பிரச்னையால் எழுதாமல் போன மாணவர்களுக்கு பிளஸ்- 2 மறுதேர்வு தொடங்கியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போக்குவரத்து பிரச்னையால் தேர்வு எழுத முடியாமல் போன பிளஸ் 2 மாணவர்களுக்கான மறுதேர்வு தொடங்கியது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தேர்வில் சில மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி தமிழகம் முழுவதும் இன்று மறுதேர்வு தொடங்கியது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் வெறும் 743 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக மொத்தம் 289 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்குப் பதிவியல், புவியியல், வேதியியல் பாடங்களுக்கு இன்று தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 9 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 94 தனித் தேர்வர்களுக்கு 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிரதேவையுள்ள மாணவர்களுக்கு மட்டும் தேர்வு மையத்துக்கு சென்றுவர சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொரோனாபாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews