திமுக, அதிமுக, பாமக, தி.க, தமிழகஅரசு தொடர்ந்த மருத்துவ படிப்புகளில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 23, 2020

Comments:0

திமுக, அதிமுக, பாமக, தி.க, தமிழகஅரசு தொடர்ந்த மருத்துவ படிப்புகளில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 9ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. மேலும், மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்குகளை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரினார். அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், உச்ச நீதின்ற வழக்கிற்கும், இந்த வழக்குக்கும் தொடர்பும் இல்லை. நீட் இல்லாதபோது அந்த வழக்கு தொடரப்பட்டது. எனவே வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews