தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 03, 2020

Comments:0

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஜூலை மாதத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்று எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் நிலவி வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ’’10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். கரோனா வைரஸ் சூழலை முன்னிட்டு பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும். பாடத் திட்டங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஆய்வு செய்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் உரிய முடிவுகளை எடுப்பார்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளை விரைவாகத் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 25-ம் தேதி முடிவடைகிறது. ஜூலை மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்பதால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். தேர்வு முடிவுகள் வெளியான பின்பு பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகமுடிவுகள் வெளியான பிறகு, பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவடட்ம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பெற்றோர்களை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். அதே சமயம், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews