தேர்வுப்பணி ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி கூட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 09, 2020

Comments:0

தேர்வுப்பணி ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி கூட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டம், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.பொதுத்தேர்வுக்கான மையங்கள், தேர்வறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை ஆய்வாளர்கள் என, அனைத்து பிரிவுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். திருப்பூரில், 2577 ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு, 16 ஆசிரியர்கள் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்களுடன், துணை மையங்களுக்கும் சேர்த்து இம்முறை, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் பணியில் ஈடுபடுகின்றனர்.இவ்வாசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் பேரில் நேற்று பள்ளிக்கு வருகை புரிந்திருந்தனர். மேலும், சமூக இடைவெளி காரணமாக, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களிலே பயிற்சி கூட்டம் நடந்தது. கண்காணிப்பாளர்கள் ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews