பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்து இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 06, 2020

Comments:0

பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்து இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் படிப்பில் 20 ஆண்டு களாக அரியர் வைத்திருப்பவர் களுக்கு இறுதி வாய்ப்பாக நடத்தப் படும் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் படித்து, 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் இரண்டு சிறப்புத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்புத் தேர்வு வழக்கமான பருவத் தேர்வோடு நடத்தப்பட்டது. ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற விருந்த மற்றொரு தேர்வு கரோனா வால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு தேர்வு குறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கரோனா தாக்கம் குறைந்து, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகம் திறக்கப்பட்டதும் வழக்க மாக நடைபெறும் பருவத் தேர்வு டன் சிறப்புத் தேர்வு நடக்க உள் ளது. சிறப்புத் தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழகத்தின் www.coe1annauniv.edu என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வுக் கட்ட ணம் செலுத்திய மாணவர்கள் மீண் டும் கட்டணம் செலுத்த தேவை யில்லை. தேர்வு நடைபெறும் தேதி விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews