தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய 14 பேர் மற்றும் 4 கல்வியாளர்கள் இடம் பெற்ற குழு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 31, 2020

Comments:0

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய 14 பேர் மற்றும் 4 கல்வியாளர்கள் இடம் பெற்ற குழு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய, அரசு அலுவலர்கள், 14 பேர் மற்றும் நான்கு கல்வியாளர்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது: தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறப்பு என்பது, சாத்தியமாக இருக்காது. ஜூன், 15 முதல் 25 வரை, தமிழகத்தில், பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்த பின், ஜூலை மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின், அப்போதைய சூழ்நிலைக்கேற்ப, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் போது, வழக்கமாக, 210 நாட்கள் இயங்க வேண்டிய, பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கையை குறையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய, அரசு அலுவலர்கள், 14 பேர் மற்றும் நான்கு கல்வியாளர்கள் இடம் பெற்ற, குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் இறுதி அறிக்கை, முதல்வரின் உயர்மட்ட குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதன் பின், பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews