10-ம் வகுப்பு தேர்வு; வீடுகளுக்கே சென்று ஹால் டிக்கெட்: தமிழக அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 21, 2020

Comments:0

10-ம் வகுப்பு தேர்வு; வீடுகளுக்கே சென்று ஹால் டிக்கெட்: தமிழக அரசு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூரில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள் வாகனத்தில் ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஹால்டிக்கெட் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. எனினும் மாணவர்களின் நலன் கருதி,ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மாணவர் பேரவை அமைப்பின் நிர்வாகி மாரியப்பன் மற்றும் பெற்றோர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னையில் வைரஸ் தொற்று பரவலாக இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைத்து எப்படித் தேர்வை நடத்தப் போகிறீர்கள், வெளியிலிருந்து எப்படி மாணவர்கள் வரமுடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் 10 , 11, 12 ஆம் வகுப்புக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் இருப்பின் மாற்று தேர்வு மையம் அமைக்கப்படும். அவர்களுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மையத்திற்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படும். பிற மாவட்டம், பிற மாநிலத்தில் இருந்துவரும் தேர்வர்களுக்கு முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தேர்வு மையத்துக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்தி தரப்படும். தேர்வானது அனைத்துவித பாதுகாப்புடன் நடத்தப்படும் என தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஹால்டிக்கெட் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. பிற மாநிலம், பிற மாவட்டத்திலிருந்து பயணிக்கும் மாணவர் முதன்மை தேர்வு மையத்தில் தனி அறையில் தேர்வு எழுதுவர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews