யார் யாருக்கு 59 வயது வரை பணி ஓய்வு? யாருக்கு பொருந்தாது? தலைமை செயலாளர் கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 15, 2020

Comments:0

யார் யாருக்கு 59 வயது வரை பணி ஓய்வு? யாருக்கு பொருந்தாது? தலைமை செயலாளர் கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு தலைமை செயலாளர் சண்முகம் அனைத்துத்துறை செயலாளர்களுக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசுக்கு வணிகவரித்துறை, பதிவுத்துறை, வருவாய், போக்குவரத்து, டாஸ்மாக் துறைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடிக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், இந்த கொரோனா பாதிப்பு இயல்பு வாழ்க்கை திரும்புவதில் தாமதம் ஏற்படும் என்பதால் வருவாய் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கு தர வேண்டிய ஊதியம் கொடுப்பதில் சிக்கல் உள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி சம்பளம் தர வேண்டும்.
ஆனால், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்து வரும் மாதங்களில் தமிழக அரசால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு சார்பில் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெற்று நிலைமையை சமாளிக்க திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் இந்தாண்டில் மட்டும் பல்வேறு துறைகளில் 10 ஆயிரம் பேர் ஓய்வு பெறவுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில், பணப்பயன்கள் தற்போதைய நிலையில் தர இயலாது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசாரின் ஓய்வு வயது 58 வயதில் இருந்து 59 ஆக உயர்த்தி கடந்த மே 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக, எந்த தேதியில் இருந்து இந்த வயது வரம்பு அடங்கும் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் தமிழக அரசுக்கு எழுப்பப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், மே 1 அல்லது அதற்கு முந்தைய நாட்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த வயது வரம்பு உயர்வு அறிவிப்பு பொருந்தாது. சில பதவிகளுக்கு ஓய்வு வயது 60 ஆக இருக்கும் சூழலில் 61 ஆக உயர்த்தப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். முதல்வரின் அறிவிப்பு அதற்கும் பொருந்தாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 59 ஆக உயர்த்தப்பட்டது, யாருக்கெல்லாம் பொருந்தாது என்பது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அனைத்து துறை செயலர்களுக்கு, தலைமை செயலர், சண்முகம் அனுப்பியுள்ள கடிதம்: தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் வயது, 58ல் இருந்து, 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மறு பணி அமர்வு செய்யப்பட்டு, மே, 1 அல்லது அதற்கு முந்தைய நாள் ஓய்வு பெறுவோருக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோர், 58 வயதானதும், ஓய்வு பெற்றாலும், கல்வியாண்டு முடியும் வரை, மறு பணியமர்வு செய்யப்பட்டு இருந்தால், அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. பணி நீட்டிப்பு காரணமாக சிலர், 60 வயதில் ஓய்வு பெறுவர்; சிலர் ஓய்வு பெற்று, ஒழுங்கு நடவடிக்கை நிறைவு பெறாமல் இருக்கும். இவர்களுக்கு எல்லாம் ஓய்வு பெறும் வயது உயர்வு பொருந்தாது. ஓய்வு வயதை நீட்டித்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட, மே, 7ம் தேதி பணியில் இருந்தவர்கள், வரும், 31ம் தேதியில் ஓய்வு பெறுவதாக இருந்தால், அவர்களுக்கு மட்டும், இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews