கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது: HIV வைரஸைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற நிபுணர் அதிர்ச்சி தகவல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 19, 2020

Comments:0

கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது: HIV வைரஸைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற நிபுணர் அதிர்ச்சி தகவல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் லூக் மான்டேனியர் கூறியுள்ளார். சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில் ஊஹான் நகரை சிதைத்தது. சுமார், சீனாவில் மட்டும் 82,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
அதனையடுத்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் மிக அதிக அளவில் பாதித்தனர். அந்த நாடுகளில் சீனாவில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருந்தது. அதேபோல, அமெரிக்காவிலும் ஏழு லட்சம் பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ஹெச்ஐவி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற மான்டேனியர் ஃபிரெஞ்சுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த வைரஸ் உருவானதாக அவர் கூறியுள்ளார். ஹெச்ஐவி வைரஸின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டில் இருப்பதாகக் கூறும் மான்டேனியர் ஊஹானில் உள்ள தேசிய உயிரிகாப்பக ஆய்வகத்தில் நடந்த விபத்தால் கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா , இயற்கையாகவே உருவானதா என்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் , கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல , சீனாவில் உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது. அது அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது என்று அமெரிக்காவின் ' பாக்ஸ் நியூஸ்' டெலிவிஷன் பிரத்யேக செய்தி ஒன்றை வெளியிட்டு, உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் அது தெரிவித்தது.
இந்தநிலையில் உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை மருத்துவமனையில் கிடக்கச் செய்துள்ள இந்த கொடிய வைரஸ் குறித்த குழப்பமும் சந்தேகமும் பல்வேறு நாடுகளிடம் எழுந்துள்ள நிலையில் எய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கொரோனா நுண்கிருமி மனிதர்களால் செயற்கையாகப் படைக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் என்ற நோயைக் கண்டுபிடித்ததற்காக 2008ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவரான அவர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ; உகான் தேசிய பயோ சேப்டி ஆய்வுக்கூடத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபத்தின் காரணமாகவே கொரோனா பரவியிருப்பதாகவும் இரண்டாயிரமாண்டு ஆரம்பம் முதலே சீனா இத்தகைய கொரோனா வைரசுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் காட்டு விலங்குகளிடமிருந்து உகான் சந்தைக்குச் சென்றதாக தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டார். இது ஒரு நல்ல புராணக்கதை, அது சாத்தியமற்றது என்று கூறினார். பல தரப்பில் இருந்து , சீனா தான் கொரோனா நோயை உருவாக்கியிருக்கும் என சமூக வலைத்தளங்களில் வந்தாலும் , சீனா இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் அமெரிக்காவும் இது போன்று கூறி வந்த நிலையில் , பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் தற்போது கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews