கொரோனாவால் உலகம் முழுவதும் 154 கோடி மாணாக்கர்களின் கல்வி பாதிப்பு - UNESCO - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 23, 2020

Comments:0

கொரோனாவால் உலகம் முழுவதும் 154 கோடி மாணாக்கர்களின் கல்வி பாதிப்பு - UNESCO

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் நோய் தொற்றுதல் காரணமாக உலகம் முழுவதும் 154 கோடி மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாண்டவமாகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 25 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 6.8 லட்சம் பேர் உடல்நலம் திரும்பியுள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுதலால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், 154 கோடி மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுனெஸ்கோவின் கல்வி பிரிவு துணை இயக்குநர் ஸ்டெபானியா ஜியானி தனியார் செய்திநிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அதன்படி, உலகம் முழுவதும் மாணவர்களை விட, மாணவிகளின் கல்வி தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் செல்லும், இடைநிற்றல் அதிகரிக்கும். பாலின வேறுபாடு அதிகரிக்கும். குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். சிறுவயதிலேயே கட்டாயத் திருமணத்துக்கு ஆளாகலாம். பள்ளிக்கே வராமல் போகலாம். இப்போதைக்கு 89 சதவீத மாணவ, மாணவியர்கள் பள்ளி செல்ல முடியாமல் உள்ளனர். அதாவது 154 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 74 கோடி பேர் மாணவிகள் ஆவர். இந்த 74 கோடியில், 11 கோடி மாணவிகள் பின்தங்கிய வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய கல்வி நிலைமை இன்னும் மோசமாகும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews