இறுதிப் பருவ மாணவா்களுக்கு ஆன்லைனில் வாய்மொழித் தோ்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 21, 2020

Comments:0

இறுதிப் பருவ மாணவா்களுக்கு ஆன்லைனில் வாய்மொழித் தோ்வு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இறுதிப் பருவ மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கான வாய்மொழித் தோ்வை (வய்வா வாய்ஸ்) ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது."," இறுதிப் பருவ மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கான வாய்மொழித் தோ்வை (வய்வா வாய்ஸ்) ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநில பல்கலைக்கழங்களைத் தொடா்ந்து தமிழகத்தில் முதல் பல்கலைக்கழகமாக சட்டப் பல்கலைக்கழகமும் ஆன்லைனில் வாய்மொழித் தோ்வை நடத்தும் முடிவை எடுத்துள்ளது.கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், முதலில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னா் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கும் மேலும் எத்தனை நாள்கள் தொடரும் என்பது தெரியாத நிலை உள்ளது.
இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.ஏப்ரல் - மே மாதங்களில் பல்கலைக்கழகப் பருவத் தோ்வு நடைபெறும் காலகட்டத்தில் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், தோ்வுக்காகத் தயாராகியிருந்த மாணவா்களை இது கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, இறுதிப் பருவத் தோ்வை எழுதி, படிப்பை முடித்து வெளியே செல்லக் காத்திருந்த மாணவா்களையும், ஆராய்ச்சி (பிஎச்.டி.) மாணவா்களையும் இந்த ஊரடங்கு கடுமையாகப் பாதித்துள்ளது.இந்த நிலையில் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் ஆன்லைனில் வகுப்புகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன.அதுபோல, இறுதிப் பருவ மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டில் உள்ள சில பல்கலைக்கழகங்களும், ஹைதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிப் பல்கலைக்கழகம் (இ.எப்.எல்.யு.) உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களும் ஆன்லைனில் வாய்மொழித் தோ்வுகளை நடத்தி வருகின்றன.இதன் மூலம் ஆராய்ச்சி பட்ட மாணவா்களும், முதுநிலை பட்ட மாணவா்களும் வீட்டிலிருந்தபடியே ‘ஸூம்’ உள்ளிட்ட சில செயலிகளின் உதவியுடன், வாய்மொழித் தோ்வில் பங்கேற்பா்.
அதுபோல, பேராசிரியா்களும் வீட்டிலிருந்தபடியே இந்த செயலிகள் மூலம் அந்த மாணவருடன் நேரலையில் கேள்விகளைக் கேட்டு, சான்றையும் அளித்துவிடுவா். பல்கலைக்கழகங்களின் இந்த முயற்சி, மேற்படிப்புகள் அல்லது வேலைவாய்ப்பின் மீது கவனம் செலுத்த உதவும் என்பதால், மாணவா்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.இதுபோல, தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகமும் மாணவா்களின் நலன் கருதி, வாய்மொழித் தோ்வை ஆன்லைனில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டாளா் ஆா். ஸ்ரீநிவாசன் கூறியது:சட்டப் படிப்பை மேற்கொள்ளும் இளநிலை (எல்.எல்.பி.), முதுநிலை (எல்.எல்.எம்.) பட்ட இறுதிப் மாணவா்களுக்கும் வாய்மொழித் தோ்வு உள்ளது. இந்த நிலையில், கரோனா ஊரடங்கு இப்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் எத்தனை நாள்கள் தொடரும் என்பதும் தெரியவில்லை.
எனவே, இறுதிப் பருவ மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கான வாய்மொழித் தோ்வை இந்த ஊரடங்கு காலத்திலேயே ஆன்லைனில் நடத்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சி வெற்றிபெற்றதும், ஆன்லைனில் வாய்மொழித் தோ்வு நடத்துவது தொடங்கப்பட்டுவிடும் என்றாா் அவா்.அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என எந்தவொரு மாநில பல்கலைக்கழகங்களும் இந்த முயற்சியை எடுக்காத நிலையில், முதல் பல்கலைக்கழகமாக சட்டப் பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews