Corona Kavach: கொரோனா பாதித்தவர்களிடம் நெருங்கினால் அலெர்ட் செய்யும் App - மத்திய அரசு அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 28, 2020

Comments:0

Corona Kavach: கொரோனா பாதித்தவர்களிடம் நெருங்கினால் அலெர்ட் செய்யும் App - மத்திய அரசு அறிமுகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கினால், எச்சரிக்கை செய்யும் மொபைல் அப்ளிகேஷனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆப் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. Corona Kavach என்று கூகுள் ப்ளே ஸ்டோரில் தேடினாலே கிடைக்கும் . கொரோனா கவச் ஆப்பை இன்ஸ்டால் செய்த நபரின் ஸ்மார்ட்போனில் உள்ள தகவலை பயன்படுத்தி அவர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை நெருங்கும்போது எச்சரிக்கவும் செய்கிறது. கொரோனா கவச் ஆப் எப்படி வேலை செய்கிறது? முதலில், ஸ்மார்ட்போனில் தொலைபேசி எண் மூலம் ஆப்பிற்குள் நுழைய வேண்டும். பின்னர் உங்கள் உடல்நிலை, சார்ந்து கேட்கப்படும் கேள்விகளைக் கொண்ட ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த கேள்விகளின் அடிப்படையில், இந்த ஆப் உங்களை வெவ்வேறு வகைகளாக வரிசைப்படுத்தும்.
பச்சை குறியீடு எனில் நலமாக உள்ளீர் என்று காட்டும்.ஆரஞ்சு குறியீடு எனில் ஒரு மருத்துவரைப் பார்க்க அறிவுறுத்தும் மஞ்சள் குறியீடு எனில் நீங்களே தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தும் சிவப்பு குறியீடு எனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று எச்சரிக்கும். ஆப்-ல் கீழே மையத்தில் ஒரு பட்டன் இருக்கும் அதனை அழுத்தினால் அருகில் கொரோனா பாதித்தவர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டால் எச்சரிக்கும் . இந்த ஆப்-ஐ பாதிக்கப்பட்டவரும் வைத்திருந்தாலோ, அல்லது பதிவு செய்திருந்தாலோதான் நமக்கு எச்சரிக்கும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews