Search This Blog
Monday, March 23, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. அத்துடன், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுவே, சமூக நீதி. அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள், மருத்துவம் பயில இத்திட்டம் வகை செய்யும். அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேருவதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும், நீட்டிக்கப்பட வேண்டும்.
அவர்களும், ஊரக ஏழை, மாணவர்களே; அது தான், முழுமையான சமூக நீதியாக அமையும்.அரசு மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இதை, மேலும் ஊக்கப்படுத்த, அரசு பள்ளிகளில், கல்வித் தரத்தை உயர்த்தவும், கழிப்பறை, விளையாட்டு திடல் உள்ளிட்ட, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
'பள்ளிகளில் அடிப்படை வசதியை மேம்படுத்துங்க!'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.