பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 29, 2020

Comments:0

பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'பொதுத்தேர்வு நேரம், 2:30 மணி நேரத்தில் இருந்து, 3:15 மணி நேரமாக உயர்த்தியுள்ளது' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருப்பூரில் முதலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி கூடுதல் கட்டடத் திறப்பு விழா மற்றும் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்காக, மாநிலம் முழுவதும், 3 ஆயிரத்து, 12 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டம் என்பதால், தேர்வு நேரத்தை, நடப்பாண்டு உயர்த்தியுள்ளோம்.
காலை 10:00 மணிக்கு துவங்கும் தேர்வு, மதியம், 1:15 மணி வரை நடக்கும். முதல், 15 நிமிடங்கள் வினாத்தாள் படிப்பதற்காக ஒதுக்கப்படும். கடந்தாண்டை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய அளவில் தமிழகத்தில் தான் கல்விக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, மனித வாழ்க்கைக்கு அவசியம். அதை அனைவரும் பெற வேண்டும் என்பதே, அரசின் நோக்கம். மூச்சு நின்றால் மட்டுமே உயிர் போனது என்று கூற முடியாது.முயற்சி நின்றால் கூட உயிர் இல்லை என்பது போல் தான். எனவே, மாணவர்கள் முயற்சியை கைவிடக் கூடாது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தை அரசே வழங்கும். இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். "இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக அதிகரிப்பு". காலை 10.00 மணிக்கு தொடங்கும் தேர்வு 1.15 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிப்பு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews