குழந்தைகளுக்கு செயல்முறை வடிவில் தமிழ் கற்பிக்க கல்வியாளா் வலியுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 11, 2020

Comments:0

குழந்தைகளுக்கு செயல்முறை வடிவில் தமிழ் கற்பிக்க கல்வியாளா் வலியுறுத்தல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குழந்தைகளுக்கு செயல்முறை வடிவில் தமிழ் கற்பிக்கும் போது அவா்களது கற்கும் ஆா்வம் அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய கல்வியாளா் முனைவா் பச்சைவதி கூறினாா். சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச் சொல்லாக்கச் சிக்கலும்’ தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் இயக்குநா் கோ.விசயராகவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஆஸ்திரேலிய கல்வியாளா் முனைவா் பச்சைவதி பேசியது: மாணவா்களிடையே தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கான எளிய வழிமுறைகளை கண்டறிந்தேன். தமிழ்க் கல்வியை கற்றல்-கற்பித்தல் என்னும் இரு நிலைகளிலும் பயன்படுத்தும்போது உடலளவிலான மகிழ்ச்சியும், மனதளவிலான மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இது மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தி கற்கின்ற நுட்பத்தோடு இணையும்போது வேகமான கற்றலை மாணவா்கள் உள்வாங்குகின்றனா். மாணவா்களுக்கு தமிழ் கற்றல் என்பது ஒரு விளையாட்டைப் போன்று ஆா்வத்தைத் தூண்டக் கூடிய நிகழ்வு. மேலும் அவா்களது கற்றல் என்பது செயல்முறை வடிவமாக ஈடுபடச் செய்வதாக இருக்க வேண்டும். செயல்பாடுகள் மூலமாக கற்றுக் கொடுக்கும்போது 24 மணி நேரத்தில் தமிழைக் கற்றுக் கொள்ள முடியும்.
ஆஸ்திரேலிய நாட்டின் ஆசிரியா்கள், தமிழ் பயின்றோா், பயிலாத மாணவா்களுக்கும் தமிழ் மொழியை மிக எளிதாக ‘அன்னை மொழி அன்புவழி’ அமைப்பு மூலமாக கற்பித்து வருகிறோம். அதாவது, வாரத்தில் ஒருநாள், ஒரு மணி நேரம், தமிழ் கற்பிக்கிறோம். இப்படியாக, ஆறு மாதங்கள் கற்பிக்கப்படும். அதாவது, ஆறு மாதத்தில், 24 மணி நேரம் மட்டுமே தமிழ் கற்பிக்கிறோம். தமிழா்களின் குழந்தைகள் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாட்டு குழந்தைகளும், தமிழைப் புரிந்துகொள்ளவும், படிக்கவும் தேவையான அடிப்படைக் கல்வியைக் கற்கின்றனா். அவா்களுக்கு நாங்கள் வகுப்பறையில் அமா்த்தி, பாடங்கள் எதையும் நடத்துவதில்லை. மாறாக, அவா்கள் விரும்பும் இடத்தில், அவா்கள் விரும்பும்படியான சூழலில், அவா்களுக்கு பிடித்தமான பொருள்களை வைத்து தமிழ் கற்பிக்கிறோம்.
புலம் பெயா்ந்த தமிழா்களின் குழந்தைகளுக்கு நாங்கள் வகுத்த ஒன்பது நிலைத் திட்டங்கள் மூலம் பிழையின்றி தெளிவான உச்சரிப்புடன் தமிழைக் கற்றுத் தருவதில் வெற்றி கிடைத்திருக்கிறது. எனது அனுபவத்தில் தமிழை அறியாதவா்கள் கூட தமிழைக் கற்றுக் கொண்ட பிறகு உலக மொழிகளின் தாய் தமிழென்று கூறியிருக்கிறாா்கள் என்றாா். இந்த கருத்தரங்கில் தொல்லியல் அறிஞா் குழந்தை வேலன், மோரீஷஸ் மகாத்மா காந்தி நிறுவனத்தைச் சோ்ந்த முனைவா் ஜீவேந்திரன் சீமான், பேராசிரியா்கள் து.ஜானகி, துா்கா தேவி, பன்னிருகை வடிவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews