8-ஆம் வகுப்பு தனித்தேர்வு: தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 10, 2020

Comments:0

8-ஆம் வகுப்பு தனித்தேர்வு: தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு பிப்.10-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு கடந்த ஜன.27-ஆம் தேதி முதல் ஜன.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நிகழாண்டு ஜன.1-ஆம் தேதியன்று பன்னிரெண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தோ்வா்கள் தத்கல் திட்டத்தின் கீழ் பிப்.10-ஆம் தேதி முதல் பிப்.12-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மட்டும் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில் (‌n‌o‌d​a‌l c‌e‌n‌t‌r‌e) ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ.125, சிறப்புக் கட்டணம் ரூ.500, விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675- தொகையை தனித்தோ்வா்கள் சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் வழியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இந்தத் தோ்வுக்கான விரிவான தகவல்களை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் காணலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை தோ்வா்கள் பிப்.12-ஆம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews