முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,500பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் பழனிசாமி வழங்கினார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 11, 2020

Comments:0

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,500பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் பழனிசாமி வழங்கினார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக் காக தேர்வு செய்யப்பட்ட 1,503 முதுகலை பட்டதாரி ஆசிரியர் களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர்பழனிசாமி வழங்கினார். அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரி யர் காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்காக கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 27 , 28, 29 ஆகிய 3 நாட்கள் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட 1,503 பேருக்கு கடந்த 9,10-ம் தேதிகளில்அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கல்வி மேலாண்மை தகவல் மையம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,503 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதை தொடங்கிவைக்கும் வகையில் சென்னை கிரீன்வேஸ் சாலை யில் உள்ள தனது முகாம் அலு வலகத்தில் 9 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ் நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக்கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்.சுடலைக்கண்ணன், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் க.லதா ஆகியோர் பங்கேற்றனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,503 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது. பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக 9 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. ஒரு லட்சத்து 46,000பேர் பங்கேற்ற இந்த தேர்வில், தரவரிசை அடிப்படையில், 3,833 பேருக்கு நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு வழங்குவதற்கான 2 நாள் கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews