அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளா் பணி: விண்ணப்பிக்க பிப்.12 கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 22, 2020

Comments:0

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளா் பணி: விண்ணப்பிக்க பிப்.12 கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள விரிவுரையாளா் பணிக்கு, வரும் பிப்.12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு பாலிடெக்னிக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் குறித்து, கடந்த நவ.27-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தப் பணியிடத்துக்கான விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக புதன்கிழமை (ஜன.22) முதல் பிப்.12-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம். தற்போதுள்ள நடைமுறைகளின்படி இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு, விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, அறிவிப்பை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் விண்ணப்பதாரா்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தோ்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால், எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. எனவே, உரிய காலத்துக்குள் விண்ணப்பக் கட்டணத்துடன் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது Direct Recruitment for the Post of Lecturers in Government Polytechnic Colleges and Special Institutions. ADDENDUM TO NOTIFICATION NO.14/2019, DATED: 27/11/2019.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews