தமிழகத்தில் முதல் முறையாக, 15 வயதில் தலைமை ஆசிரியையான மாணவி.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 26, 2020

Comments:0

தமிழகத்தில் முதல் முறையாக, 15 வயதில் தலைமை ஆசிரியையான மாணவி.!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருக்கிறது மிளகனூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணியாற்றுகின்றனர். நேற்று உலக பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளியில் சிறப்பு நிகழ்வு ஒன்றை நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அதாவது பள்ளியில் பயிலும் மாணவிகளில் சிறந்து விளங்கும் ஒருவரை ஒருநாள் தலைமையாசிரியராக நியமிப்பது தான் அது. ஒருநாள் முதல்வர் போல்..! ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராக பதவியேற்ற மாணவி.! என்ன காரணம் தெரியுமா..? தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று இந்தியாவில் கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நாளில் பெண் பிள்ளைகளை கவுரவிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனுர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் மாணவி ஒருவருக்கு, ஒருநாள் தலைமையாசிரியர் பதவி கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுவருகிறது.
மொத்தம் 75 மாணவ, மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் 7 ஆசிரியர், ஆசிரியைகள் வெளிப்பார்த்துவருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வருகைப் பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செயதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய 10 ஆம் வகுப்பு படித்துவரும் காவ்யா என்ற மனைவியை தேர்வு செய்து அவரை பள்ளி தலைமை ஆசிரியராக அமரவைத்தனர். இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுடன் காவ்யா ஆலோசனை நடத்தினார். பின் தலைமையாசிரியராக பொறுப்பேற்ற காவ்யா ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று பாடங்கள் கற்பிக்கும் திறன் குறித்து ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்கள் விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார். அரசு பள்ளி மாணவியை ஒரு நாள் தலைமையாசிரியராக நியமித்த விஷயம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி கல்வி, விளையாட்டு, பழக்கவழக்கம், பிறருக்கு உதவும் குணம், ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய காவ்யா என்கிற மாணவியை தேர்வு செய்தனர். அவர் 10 வகுப்பு படித்து வருகிறார். ஒருநாள் தலைமையாசிரியராக தேர்வான காவ்யாவை பள்ளி தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியர்களும் சேர்ந்து இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் அவர்கள் தலைமையாசிரியரின் செயல்பாடுகள் குறித்து காவ்யாவிற்கும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து காவ்யா பள்ளியின் முக்கிய கோப்புகளை பார்வையிட்டார்.
ஆசிரியர்களிடம் கலந்தாய்வு நடத்திவிட்டு ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று ஆய்வு நடத்தினார். வகுப்பறையில் மாணவ மாணவிகளிடம் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சி பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர். ஒருநாள் தலைமையாசிரியராக மாணவி ஒருவர் செயல்பட்டது பிற மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews