'குரூப் - 4' தேர்வர்களிடம் 6 மணி நேரம் முறைகேடு குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 14, 2020

Comments:0

'குரூப் - 4' தேர்வர்களிடம் 6 மணி நேரம் முறைகேடு குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'குரூப் - 4' தேர்வு முறைகேடு தொடர்பாக, தேர்வு எழுதிய, 50க்கும் மேற்பட்டோரிடம், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், ஆறு மணி நேரம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்களுக்கு மறுதேர்வும் நடத்தப்பட்டு உள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., 2019 செப்டம்பரில் நடத்திய, குரூப் - 4 தேர்வின் முடிவுகள், நவம்பரில் வெளியாகின.ஆஜர்இதில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், தர வரிசையில், முதல், 100 பேர் பட்டியலில் இடம் பெற்றனர். இதுகுறித்து, மற்ற தேர்வர்கள் தரப்பில், முறைகேடு புகார் எழுந்தது. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மீது, சந்தேகம் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தனர். இதன்பின், குரூப் - 4 தேர்வில் முன்னிலை இடம் பெற்ற, 50க்கும் மேற்பட்டோருக்கு, விசாரணைக்கு வரும்படி, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். சம்மன் பெற்றவர்கள், நேற்று, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம், காலை, 10:00 முதல், மாலை, 4:30 மணி வரை, ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஐந்து சுற்றுகளாக தேர்வர்களிடம், தனித்தனியே விசாரணை நடத்தினர். தேர்வர்களுக்கு, குரூப் - 4 பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய வினாத்தாள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. விளக்கம் கேட்புஇந்த தேர்வின் வழியே, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு, அடிப்படை தகவல்கள் தெரிந்துள்ளதா என, சோதனை செய்வதற்கு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.விசாரணை முழுவதும், வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில், தேர்வர்களிடம் சில உறுதிமொழி கடிதங்களில் கையெழுத்து பெறப்பட்டு உள்ளன.விசாரணைக்கு அழைக்கப்பட்டோரில், சிலர் ஆஜராகவில்லை என, தெரிகிறது.
அவர்களின் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிடவில்லை.விசாரணைக்கு வந்தவர்களில் பலர், ராமநாதபுரம் மாவட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியிருந்தாலும், விழுப்புரம், சிவகங்கை, வேலுார், திருவண்ணாமலை என, பிற மாவட்டங்களில் வசிப்பவர்கள். அவர்கள், ராமநாதபுரம் தேர்வு மையத்தை தேர்வு செய்தது ஏன் என, அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். இந்த விசாரணை குறித்து, பொங்கல் விடுமுறைக்கு பின் அதிகாரிகள் கூடி ஆலோசித்து, அறிக்கை தயார் செய்ய உள்ளனர். அறிக்கையின் முடிவு, தேர்வாணைய உறுப்பினர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.இந்த விவாதத்தின் முடிவில், தேர்வை ரத்து செய்வதா அல்லது முறைகேடு இல்லை என, தெரிந்தால், அடுத்த கட்ட நியமன நடவடிக்கையை துவங்குவதா என, முடிவு செய்ய உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews