300 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 14, 2019

Comments:0

300 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டியதில் எத்தனை லேப்டாப் திருடு போனது என்று விவரம் தர வேண்டும் என்று சிறப்பு திட்டத்துறை கணக்கு கேட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவார்கள். சில காரணங்களால் மாணவர்களுக்கு உடனே வழங்காமல் இருந்ததால் திருடுபோனது. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர், மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சிறப்புத் திட்டத்துறை சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2011-2012ம் கல்வி ஆண்டு முதல் நடப்பு கல்வி ஆண்டு வரை, பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த லேப்டாப்புகளில் எத்தன திருடுபோனது என்பது குறித்த விவரங்களை சிறப்பு திட்டத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பரிந்துரை அறிக்கையை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர், அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்மைப்பு வசதிகள் தொடர்பான அறிக்கை தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் 300 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் தேவைப்படும் மாணவ, மாணவியருக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, கூடுதலாக தேவைப்படும் வகுப்பறை வசதிகள் பள்ளிகளுக்கான சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விரிவான பரிந்துரை அறிக்கையை தயார் செய்து ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பரிந்துரையில் தெரிவிக்கப்படும் திட்டங்கள் நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும்.அதனால் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர்களை இதில் பரிந்துரை செய்யக்கூடாது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews