கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீக்கம் - மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்ல உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 10, 2019

Comments:0

கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீக்கம் - மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்ல உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக அரசின் கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து அமலன் ஜெரோம் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக தமிழக அரசின் கல்வி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து அமலன் ஜெரோம் நீக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை வளர்நகரைச் சேர்ந்த ஆர்.அருண் உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், "தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் மாநில அரசு சார்பில் 26.8.2019-ல் கல்வி டிவி தொடங்கப்பட்டது. இதன் நிகழ்ச்சி தயாரிப்பாளராக அமலன் ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீது தமிழக அரசு சார்பில் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட சிடியை அரசிடம் ஒப்படைக்கும் முன்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதித்தது உட்பட பல்வேறு முறைகேடு புகார்கள் நிலுவையில் உள்ளன.
இந்த முறைகேடு தொடர்பாக அமலன் ஜெரோம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் 29.1.2019-ல் வழக்கு பதிவு செய்தனர். ஊழல் வழக்கை எதிர்கொண்டு வரும் அமலன் ஜேரோமை கல்வி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளராக நியமித்தது சட்டவிரோதம். எனவே அமலன் ஜெரோமை பணி நீக்கம் செய்து, தகுதியான ஆசிரியரை கல்வி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளராக நியமிக்க உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, கிருஷ்வள்ளி அமர்வில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், முகமதுரஸ்வி வாதிட்டனர். அரசு வழக்கறிஞர் ஸ்ரீமதி வாதிடுகையில், அமலன் ஜெரோம் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. கல்வி டிவி நிகழ்ச்சிக்கு அவர் குந்தகம் விளைவிப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால் அவர் கல்வி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து டிச.7-ல் நீக்கப்பட்டார் என்றார். அமலன் ஜெரோம் நீக்கம் தொடர்பாக கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து, அமலன் ஜெரோம் மீதான லஞ்ச ஒழிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளரை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அது தொடா்பான வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த அருண் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு சாா்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளராக அமலன் ஜெரோம் என்பவா் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், அமலன் ஜெரோமின் மனைவி நடத்தி வரும் நிறுவனத்திற்கு, கல்வி தொலைக்காட்சிக்காக இசை மற்றும் அனிமேஷன் விடியோ பதிவுகளுடன் கூடிய திறன் வளா்ப்புப் பாடங்களை சிடி வடிவில் கொண்டுவரும் பணி வழங்கப்பட்டது.
அந்நிறுவனம் கல்வி தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் சிடி பதிவுகளைக் கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டியதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அமலன் ஜெரோம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் அறிவொளி ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். எனவே, அமலன் ஜெரோம் கல்வி தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளராக தொடா்வது சட்டவிரோதம் ஆகும். எனவே அவரை கல்வி தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளா் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நீதிபதி எம். துரைசாமி, டி. கிருஷ்ணவள்ளி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அமலன் ஜெரோம் மீது வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, அவா் கல்வி தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews