கல்வி நிலையங்களில் குழந்தைகளை வேலையில் சேர்க்க தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 09, 2019

Comments:0

கல்வி நிலையங்களில் குழந்தைகளை வேலையில் சேர்க்க தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு துறைகளில், எந்த இடத்திலும், குழந்தை தொழிலாளர் முறை இருக்கக் கூடாது' என, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும், குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விதிமுறைகள், தொழிலாளர் நல ஆணையர் வாயிலாக, அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள், அரசு துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.விதிமுறைகள் என்ன? ● அனைத்து அலுவலகங்களிலும், அரசு துறைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை இருக்கக்கூடாது. ஆபீஸ் பாய் வேலை, சாதாரண திறன் சாராத தொழில்களில் ஈடுபடுத்துவது, அலுவலக ஊழியர்களுக்கு உதவியாளர் என, அனைத்து நிலைகளிலும், சிறுவர், சிறுமியரை பணியமர்த்த கூடாது
● நிரந்தரமாகவோ, தினக்கூலி அடிப்படையிலோ, குழந்தைகளை வேலைகள் செய்ய பணிக்கக்கூடாது ● அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்டவற்றின் கேன்டீன்கள், விடுதிகள் போன்றவற்றின் சாதாரண வேலைகளுக்கு கூட, அவர்களை பயன்படுத்த கூடாது ● விதிகளை மீறி, குழந்தைகளை வேலைக்கு பயன்படுத்துவது கண்டறியப் பட்டால், மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews