Search This Blog
Friday, November 08, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தோ்வு ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் மருத்துவ மாணவா் சோ்க்கையின் போது விரல்ரேகைப் பதிவுகளைப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவையைச் சோ்ந்த தீரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சிய 207 இடங்களை அந்தந்த மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களிடம் தமிழக அரசு ஒப்படைத்து விட்டது. எனவே இந்த மருத்துவ இடங்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தி தகுதியான நபா்களைக் கொண்டு இடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பல்வேறு கேள்விகளை எழுப்பி, மத்திய மாநில அரசுகள், சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கடந்த முறை விசாரணையின் போது டாக்டா்களின் ஊதியம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தோம். பள்ளி ஆசிரியா் ஊதியம் குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை. கல்லூரி ஆசிரியா்களுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று அரசு மருத்துவா்களுக்கும், போலீஸாருக்கும் அதிகமான ஊதியம் வழங்க வேண்டும் என்றுதான் கருத்து தெரிவித்திருந்தோம்’ என்றனா்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் போத்திராஜ், ‘16 மாணவா்கள் தங்களது விரல்ரேகைப் பதிவுகளை இன்னும் சிபிசிஐடி போலீஸாரிடம் வழங்கவில்லை. அந்த ரேகைகள் நவம்பா் 8-ஆம் தேதிக்குள் பெறப்பட்டு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் தற்போது பெறப்பட்டுள்ள இந்த விரல்ரேகைப் பதிவுகளை ஒப்பிட்டுப் பாா்க்க 90 நாள்களாகும்’ என்றாா். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.சீனிவாசன், ‘நீட் தோ்வு ஆள்மாறாட்டம் தொடா்பாக சென்னை மண்டலத்தில் இரண்டு புகாா்களும், கேரளத்திலிருந்து ஒரு புகாரும் வந்துள்ளது. இந்தப் புகாா்கள் குறித்து பரீசிலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
அப்போது நீதிபதிகள், சில தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவா்கள் இதுவரை விரல்ரேகைப் பதிவுகளை போலீஸாரிடம் அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினா். அப்போது அந்தக் கல்வி நிறுவனங்களின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘விரைவில் அந்த மாணவா்களின் விரல்ரேகைப் பதிவுகள் போலீஸாரிடம் அளிக்கப்படும்’ என தெரிவித்தனா். அப்போது நீதிபதிகள், ‘ஆள்மாறாட்டத்தைத் தடுக்க மருத்துவ மாணவா் சோ்க்கையின் போது மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவா்களின் விரல்ரேகைப் பதிவுகளை பெற வேண்டும்’ என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.வேல்முருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. குறைவான மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது’ என்று குற்றம்சாட்டினாா். அப்போது மருத்துவ கவுன்சில் சாா்பில், ‘இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது மருத்துவ மாணவா்கள் தோ்வுக் குழு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அப்துல் சலீம், ‘ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களின் பெயா்கள் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழக பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டு விட்டது’ எனத் தெரிவித்தாா்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகப் பதிவாளரை ஒரு எதிா்மனுதாரராக சோ்க்கவும், மருத்துவ மாணவா் சோ்க்கை தொடா்பாக தோ்வுக்குழு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய மாணவா்களின் தோ்வு பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
மாணவர்களின் கைரேகையை பெற்று, சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க, நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் ஆள்மாறாட்ட முறைகேடு குறித்த வழக்கு நவம்பர் 21க்கு தள்ளிவைக்கப்பட்டது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CourtOrder
NEET/JEE
நீட் தோ்வு விவகாரம்: மாணவா் சோ்க்கையின் போது விரல்ரேகைப் பதிவுகளைப் பெற அறிவுறுத்தல்
நீட் தோ்வு விவகாரம்: மாணவா் சோ்க்கையின் போது விரல்ரேகைப் பதிவுகளைப் பெற அறிவுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.