Breaking

Monday, November 25, 2019

சிவில் நீதிபதி பதவிக்கு முதல்நிலை தகுதி தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தகுதி தேர்வு நேற்று நடந்தது. இதில், 8,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும், சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள, 176 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, செப்., 9 முதல், அக்., 29 வரை நடந்தது. இந்நிலையில், சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தகுதி தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வில், 8,000த்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மார்ச்சில், பிரதான தேர்வு நடத்தி, இறுதி பட்டியல் வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 176 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை 8,000 பேர் எழுதி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 187 மையங்களில் காலி 10 மணி முதல் தேர்வு நடைபெற்று வருகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog