👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி கல்வித் துறை ஜவகர் பால்பவன் சார்பில் மாநில சிறந்த படைப்பாளி குழந்தை விருதுகளுக்குத் தேர்வு பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.புதுச்சேரி ஜவகர் பால்பவன் இல்லத்தில், அக்டோபர் 30, 31 தேதிகளில் மாநில சிறந்த படைப்பாளி குழந்தை விருதுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் இருந்து 9 முதல் 16 வயதுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் படைப்பாற்றல் நிகழ்கலை, படைப்பாற்றல் கலை, படைப்பாற்றல் எழுத்து, அறிவியல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற, மாநில சிறந்த படைப்பாளி குழந்தைகள் விருது பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.வயலின்: ஆராதனா (ஜவகர் சிறுவர் இல்லம்), மிருதங்கம்: சுதர்சன் (லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா பள்ளி),வாய்ப்பாட்டு: சன்மதி (வில்லியனுார் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி),நடனம்: ரித்திகா (மூலகுளம் அமிர்தா வித்யாலயா பள்ளி), அருணா (புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி), சவுந்தர்ய லட்சுமி (லாஸ்பேட்டை குளூனி பள்ளி), சாருலதா (வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர்), நித்ய ஸ்ரீ ( காரைக்கால் ஓ.என்.ஜி.சி., பப்ளிக் பள்ளி) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், படைப்பாற்றல் கலைப்பிரிவில், ஜோதிகா (மாகி எக்ஸல் பப்ளிக் பள்ளி), ஜெயகணேஷ் (கூடப்பாக்கம் ஜவகர் மேல்நிலைப்பள்ளி), செந்துாரிகை (லாஸ்பேட்டை குளூனி பள்ளி) ஆகியோரும், படைப்பாற்றல் எழுத்துப்பிரிவில் பிரீத்தி (வில்லியனுார் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி), சர்வோஷினி (ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி), குமார் ராஜா (ஏனாம் மகாத்மா காந்தி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி) தேர்வாகினர்.அறிவியல் பிரிவில் திஷ்ணா (மூலகுளம் ஸ்டேன்ஸ் போர்டு மேல்நிலைப்பள்ளி), ரோஷினி (காரைக்கால் குட் ெஷப்பர்டு ஆங்கிலப்பள்ளி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குழந்தைகள் தின விழாவில் ரூ.5,000 ரொக்கம், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.இத்தகவலை கல்வித் துறை இயக்குநர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U