ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவர் தற்கொலை முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 09, 2019

ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவர் தற்கொலை முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்கள் கண்டித்ததால், மாடியில் இருந்து, மாணவர் குதித்த விவகாரம் குறித்து, கல்வித் துறையினர் விசாரித்து வருகின்றனர். வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த கொரட்டியை சேர்ந்த, கூலித் தொழிலாளி ராஜா, 55. இவரது மகன் விக்னேஷ், 17, கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார்.நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, பொதுத்தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்த, சிறப்பு வகுப்பு நடந்தது. விக்னேஷ், சிறப்பு வகுப்புக்கு செல்லாமல், சக மாணவர்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஆசிரியர்கள், அவரை கண்டித்தனர். இதனால் பயந்த விக்னேஷ், பள்ளியில் உள்ள இரண்டாவது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவரை, ஆசிரியர்கள் மீட்டு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின் அவர், மேல் சிகிச்சைக்காக, வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கந்திலி போலீசார் மற்றும் திருப்பத்துார் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(17). கொரட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும். விக்னேஷ் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொள்ளாமல் விக்னேஷ் நண்பர்களுடன் பேசிக்கெண்டிருந்தாராம். இதை பார்த்த தலைமை ஆசிரியர், விக்னேஷை கண்டித்ததுடன் நாளை வரும்போது உனது பெற்றோருடன் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த விக்னேஷ் பள்ளியின் 3வது மாடி மேல்தளத்தில் இருந்து கீழே குதித்துவிட்டார். கால்கள், தலை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் அடைந்த அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews