இன்ஜி., கல்லூரிகளுக்கு எச்சரிக்கை: அனுபவ சான்று மறுக்கக் கூடாது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 01, 2019

Comments:0

இன்ஜி., கல்லூரிகளுக்கு எச்சரிக்கை: அனுபவ சான்று மறுக்கக் கூடாது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அரசு கல்லுாரி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்காத இன்ஜி. கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என உயர் கல்வித்துறை எச்சரித்துள்ளது.தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.யால் நிரப்பப்பட உள்ளன.அக்டோபர் 7 முதல் 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுகள் பெறப்படுகின்றன; வரும் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பம் பதிவு செய்வோர் உதவி பேராசிரியராக பணியாற்றிய அனுபவ சான்றிதழை அளித்தால் அதற்கு தனி மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆனால் பல கல்லுாரிகள் அனுபவ சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் சான்றிதழுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதாகவும் புகார் எழுந்தது.இதையடுத்து 'அனுபவ சான்றிதழ் அளிக்காத கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கல்லுாரி கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும் அனுபவ சான்றிதழ் கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.இதையடுத்து தமிழக உயர் கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து இன்ஜி. கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் தங்களின் அனுபவ சான்றிதழில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரின் மேல் ஒப்பம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.எனவே அனுபவ சான்றிதழ் கேட்போருக்கு பணி சான்றிதழ் சம்பள விபரம் வருகை பதிவேடு ஆகியவற்றின் நகல்களை இன்ஜி. கல்லுாரிகள் வழங்க வேண்டும். அவற்றை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் தாக்கல் செய்து மேல் ஒப்பம் பெற வேண்டும்.இந்த சான்றிதழ் விபரங்களை தர மறுத்தல் காரணமின்றி தாமதம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த கல்லுாரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யும் ஆசிரியர்களிடம் கல்லூரிகளோ, நிகர்நிலை பல்கலைக்கழகங்களோ பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி கல்வித்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த பணி நியமனம் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அனுபவ சான்றிதழை கண்டிப்பாக இணைக்க வேண்டும். நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அனுபவ சான்றிதழ் கேட்டால் அவர்களிடம் நிகர்நிலை பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகம் பணம் கேட்கிறார்கள்.
ஒரு ஆண்டு அனுபவ சான்றிதழுக்கு 5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும், பணியிலிருந்து விலகியவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அனுபவ சான்றிதழ் கேட்பவர்களிடம் ராஜினாமா கடிதத்தையும் சில கல்லுரிகள் கேட்கிறார்களாம். ஏற்கனவே, இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ள நிலையில், அனுபவ சான்றிதழ் கேட்பவர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இந்த நிலை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. குறைந்த அளவு மாதச் சம்பளம் பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் அனுபவ சான்றிதழை பெறுவதற்காக ஒரு மாத சம்பளத்தையே கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அனுபவ சான்றிதழுக்கு பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews