ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு இன்றுடன் முடிகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 29, 2019

Comments:0

ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு இன்றுடன் முடிகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்றுடன் முடிகிறது. தேர்வு எழுத வந்தவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடத்தியது. இத்தேர்வை சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வில் இந்தியா முழுவதும் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் மெயின் தேர்வு கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று (கட்டுரை வடிவிலானது) நடந்தது. தொடர்ந்து 21ம் தேதி காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும், 22ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), மதியம் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு4) நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்திய ெமாழியில் ஒரு தாள் தேர்வு நடக்கிறது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை ஆங்கிலம் தேர்வும் நடந்தது. தமிழகத்தில் சென்னையில் சூளை ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மட்டும் இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுத வந்த மாணவர்கள் போலீசார் மூலம் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், மோதிரம் உள்ளிட்டவை அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் தேர்வு நடைபெற்ற மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மெயின் தேர்வுக்கான கடைசி தேர்வு இன்று நடக்கிறது. காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வில் இந்திய ெமாழி தேர்வு இன்று நடக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். இதில், இந்தியா முழுவதும் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மெயின் தேர்வு கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று கட்டுரை வடிவிலான தேர்வு நடந்தது. தொடர்ந்து, 21ம் தேதி காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும், 22ம் தேதி காலையில் 4ம் தாள் (பொது அறிவு 3), மதியம் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு4) நடந்தது. இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்திய ெமாழியில் ஒரு தாள் தேர்வு நடக்கிறது. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை ஆங்கிலம் தேர்வு நடக்கிறது.கடைசி நாளான நாளை காலையில் விருப்பப் பாடம் முதல் தாள் தேர்வும், ளபிற்பகலில் விருப்பப் பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இந்த தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் இத் தேர்வு நடக்கிறது. சென்னையில் சூளை ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு நடக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews