பொதுத்தேர்வு உத்தரவை திரும்ப பெற ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 21, 2019

Comments:0

பொதுத்தேர்வு உத்தரவை திரும்ப பெற ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை: &'தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவருக்கான பொதுத் தேர்வு நடத்தும் அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும்&' என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.அச்சங்க மாநில தலைவர் சுரேஷ், பொது செயலாளர் மனோகரன், பொருளாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளதாவது: இலவச கட்டாய கல்வி உரிமை சட்ட திருத்தங்களின்படி ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கிராம மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும். மாணவர் இடைநிற்றலை அதிகரிக்கும்.முதல்வராக இருந்த ஜெயலலிதா எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி செய்யப்படும் என அறிவித்தார். ஆனால் தற்போதுள்ள அ.தி.மு.க., அரசு அதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.மத்திய அரசு கல்வி உரிமை சட்டத் திருத்தம் பிரிவு 30ல் &'எந்த குழந்தையும் எட்டாம் வகுப்பு முடியும் வரை வாரிய தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை&' என கூறுகிறது.வாரிய தேர்வுக்கும் வழக்கமான தேர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும். படிப்பதற்கான சூழலை உருவாக்குவதே அரசின் கடமை. மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படாது என்றாலும் மாணவர் நலன் கருதி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான உத்தரவை திரும்ப பெற வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews