Search This Blog
Sunday, September 22, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை அண்ணா பல்கலையை, உயர் புகழ் கல்வி நிறுவனமாக அறிவித்து, அதை மாற்றுவதற்கு, முழு நிதியையும், மத்திய அரசு வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:அண்ணா பல்கலை, இந்தியாவின் உயர் புகழ் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட, தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த, அண்ணா பல்கலையிடம், நிதி இல்லாத நிலையில், இந்த அரிய வாய்ப்பை, பல்கலை இழக்க நேரிடுமோ என்ற, கவலை ஏற்பட்டுள்ளது.உயர் புகழ் நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டு உள்ள, 10 அரசு கல்வி நிறுவனங்களில், சென்னை, ஐ.ஐ.டி., உள்ளிட்ட, எட்டு நிறுவனங்களின் செலவை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.அண்ணா பல்கலைக்கான செலவில், பெரும் பகுதியை, மாநில அரசு ஏற்க வேண்டும் என்று, மத்திய அரசு கூறியிருப்பது, முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.
பல்கலையை தரம் உயர்த்த ஆகும் செலவில், 50 சதவீதம் அல்லது 1,000 கோடி ரூபாயில், எது குறைவோ, அதை மட்டும் மத்திய அரசு வழங்கும். அண்ணா பல்கலையை மேம்படுத்த, 2,750 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும், 1,000 கோடி ரூபாய் தவிர, மீதமுள்ள, 1,750 கோடி ரூபாயை, ஐந்து ஆண்டுகளில், அண்ணா பல்கலை திரட்ட வேண்டும்; இது சாத்தியமல்ல.இத்தொகையை, தமிழக அரசு வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.இல்லையெனில், இந்த தகுதி, மஹாராஷ்டிராவில் உள்ள, சாவித்ரிபாய் புலே பல்கலை அல்லது அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கு மாற்றி வழங்கப்படும் என, மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.மத்திய அரசின் இச்செயல், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சமூக அநீதி. எனவே, சென்னை அண்ணா பல்கலையை, உயர் புகழ் கல்வி நிறுவனமாக அறிவித்து, அதை மாற்றுவதற்கான முழு நிதியையும், மத்திய அரசே வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அண்ணா பல்கலைக்கு முழு நிதி மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.