Search This Blog
Monday, September 23, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லுாரிகளில், 'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை தொடர்பாக, நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வலியுறுத்தப் பட்டது.
தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கத்தின், 16ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், கோவையில் நடந்தது. சங்க தலைவர் அஜித்குமார் லால் மோகன் தலைமை வகித்தார். செயலர் சேதுபதி, பொருளாளர் நித்யானந்தன் முன்னிலை வகித்தனர்.தீர்மானங்கள் விபரம்:'கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை, இனிமேல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் முறையில் சேர்க்கை நடத்தப்பட்டால், மாணவர்கள் பாடப்பிரிவை தேர்வு செய்வதில், பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். ஒவ்வொரு கல்லுாரிகளிலும் பாடப்பிரிவுகள் மாறுபட்டுஇருக்கும்.எனவே, ஆன்லைன் மாணவர் சேர்க்கை தொடர்பாக, கல்லுாரிகளின் சங்கம் மற்றும் கல்லுாரி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து, முடிவு எடுக்க வேண்டும்.
பல்கலைக்கழக சிண்டிகேட்டில், கல்லுாரிகளின் செயலர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க கோரி, சங்கம் சார்பில், ஐகோர்ட்டில் வழக்குதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பல்கலைக் கழகங்களில், கல்லுாரி செயலர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க, ஐகோர்ட் பரிந்துரைத்துஉள்ளது.இதன்படி, சிண்டிகேட் நிர்வாகத்தில், மாற்றம் செய்வது தொடர்பாக, அரசுக்கு, பல்கலைக்கழகங்கள் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதை, சங்கம் வரவேற்கிறது. சுயநிதி கல்லுாரிகளில், இணை பேராசிரியர்கள் நியமித்து கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறோம். பாரதியார் பல்கலையில், தனியார் கிளை கல்வி மையங்கள் நடத்த தடை செய்ததை வரவேற்கிறோம்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், சங்கத்தின் மலரை, தலைவர் அஜித்லால் குமார் மோகன் வெளியிட, துணை தலைவர் மதன் செந்தில், செயற்குழு உறுப்பினர் முத்துராஜ் பெற்றுக் கொண்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கல்லுாரிகளில், 'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.