Search This Blog
Monday, September 23, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ் தெரியாதவர்கள் எழுத அனுமதிக்கக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் தெரியாதவர்களும், தேர்வுகளை எழுதலாம் என, கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை, எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் எழுதலாம் என்ற விதிமுறை, பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால், அப்போதெல்லாம், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் எவரும், தமிழ்நாடு அரசு பணிகளில் சேர, ஆர்வம் காட்டியதில்லை. சில ஆண்டுகளாக, ரயில்வே, தபால், வங்கி என, மத்திய அரசு பணிகள் வாயிலாக, தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை, வெளி மாநிலத்தவர்கள் கைப்பற்ற துவங்கி உள்ளனர். தமிழ் தெரியாதவர்களை, சிவில் நீதிபதிகளாக நியமித்தால், நீதிமன்றங்கள் ஹிந்தியிலும், பிறமொழிகளிலும் இயங்கும் நிலை உருவாகி விடும். எந்த பணிகளாக இருந்தாலும், தமிழர்களை மட்டுமே நியமிக்கும் வகையில், அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில், திருத்தங்களை செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நீதிபதி பணி தேர்வு: தமிழ் தெரியாதவர்கள் எழுத அனுமதிக்கக் கூடாது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.