தமிழகத்தில் ஆள் மாறாட்டம் செய்து எத்தனை பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 26, 2019

Comments:0

தமிழகத்தில் ஆள் மாறாட்டம் செய்து எத்தனை பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீடு இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அகில இந்தியா மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை மதிப்பெண்களுடன் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: சமீப காலமாக மருத்துவ படிப்பில் சேர பல முறைகேடுகள் நடைபெறுவது வருத்தத்தை அளிக்கிறது. நீட் தேர்வில் தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் உதித் சூர்யாவுக்காக வேறு ஒருவர் தேர்வு எழுதியுள்ளார். இதுபோன்ற ஆள்மாற்றம் கண்டிக்கத்தக்கது. எனவே, இந்த விஷயம் குறித்து தமிழக அரசிடம் இந்த நீதிமன்றம் கீழ்கண்ட கேள்விகளை கேட்கிறது.
* எத்தனை பேர் ஆள் மாறாட்டம் மூலம் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்?
* நீட் தேர்வு எழுதியவர்களின் அடையாளம், மாணவர் சேர்க்கை பெற்றவர்களின் அடையாளம் சரிபார்க்கப்பட்டதா?
* ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி தொடர்பாக வேறு வழக்குகள் கண்டறியபட்டுள்ளதா? பதிவுசெய்யபட்டுள்ளதா?
* தேர்வுக்கு மாணவரை சோதித்து அனுப்புவது முதல் தேர்வு முடியும்வரை அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுகிறதா?
* இரட்டை இருப்பிடச் சான்று வாங்கி கல்லூரிகளில் சேர்ந்ததுபோல் மோசடியாக மாணவர் சேர்க்கை பெற்றுள்ளார்களா? இந்த கேள்விகளுக்கு வரும் 26ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று விளக்கம் தர அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 இடங்கள் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்தும், ஆள்மாறாட்டம் குறித்தும் நாளைக்குள் பதில்தர அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews