கல்வி கட்டணம் வழங்க மறுப்பு :கல்லூரி ரூ.50,000 வழங்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 03, 2019

கல்வி கட்டணம் வழங்க மறுப்பு :கல்லூரி ரூ.50,000 வழங்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில், சென்னை, விருகம்பாக்கம், போஸ்டல் ஆடிட்டர் காலனியைச் சேர்ந்த, கமலக்கண்ணன் தாக்கல் செய்த மனு: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் உள்ள தனியார் கல்லுாரியில், 2013 - 2014ம் கல்வியாண்டில், பி.ஆர்க்., பட்டப்படிப்பில் சேர்ந்தேன். கல்வி கட்டணம், 2.41 லட்சம் ரூபாய் செலுத்தினேன்.கல்லுாரி துவங்கும்போது, கல்லுாரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தொடர்ந்து படிக்க முடியவில்லை. கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் எனக் கேட்டதற்கு, நிர்வாகம் மறுத்துவிட்டது.கல்வி கட்டணத்துடன், சேவை குறைபாட்டிற்கு, 1.50 லட்சம் ரூபாயும், இழப்பீடு, 1 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.வழக்கு, 2014ல் இருந்து நடந்து வந்தது. வழக்கு விசாரணையில், &'கல்லுாரியில் வகுப்பு துவங்கிய நிலையில், மாணவரின் கோரிக்கையை, நிபந்தனைகளின் படி ஏற்க முடியாது. &'நிர்வாகம் இழப்பை சந்திக்க வேண்டியதிருக்கும். மாணவருக்கு, கல்லுாரி கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டியதில்லை&' என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்தது.வழக்கில், நீதிபதி ஜஸ்டின் டேவிட் பிறப்பித்த உத்தரவு:கல்லுாரி நிர்வாகத்தின் சேவையில் குறைபாடு உள்ளது. மாணவருக்கு கல்வி கட்டணம், 2.41 லட்சம் ரூபாயை திரும்ப வழங்க வேண்டும். இத்துடன், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews