எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் இரட்டை குடியுரிமை பிரச்னை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் இரட்டை குடியுரிமை பிரச்னை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்டாக் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் ஒவ்வொரு ஆண்டும், இரட்டை குடியுரிமை பிரச்னையை தீர்க்க முடியாமல், வருவாய்த்துறைஅதிகாரிகள் திணறி வருகின்றனர்.புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் சென்டாக் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. நீட் தேர்வு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு நடக்கிறது. தற்போது, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு 2 கட்ட கலந்தாய்வு முடிந்து சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சில மாணவர்கள், அரசு ஒதுக்கீடு இடங்களை பெறுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்தாண்டும் சில மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லுாரியில், இரட்டை குடியுரிமையுடன் விண்ணப்பித்து இடங்களை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரியில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களை பெற வேண்டும் என்றால், மாணவர் அந்த மாநிலத்தின் குடியுரிமையை பெற்று இருக்க வேண்டும். சில மாணவர்கள் புதுச்சேரி - தமிழகம், புதுச்சேரி - கேரளா, புதுச்சேரி - கர்நாடகம் என இரு மாநில குடியுரிமையுடன் சென்டாக் கலந்தாய்வில் பங்கேற்பது தொடர்கிறது. புதுச்சேரி குடியுரிமை பெற, மாணவரின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவர் அல்லது பாதுகாப்பாளர் தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கியிருந்தால், அந்த மாணவர் அல்லது மாணவி புதுச்சேரி குடியுரிமை பெற தகுதியுடையவராக கருத்தப்படுகிறார்.மத்திய அரசு ஊழியர்கள் பிள்ளைகள், புதுச்சேரி குடியுரிமை பெற வேண்டும் என்றால், 3 ஆண்டுகள் புதுச்சேரியில் பணியாற்றி இருப்பதுடன், அவரது மகன் அல்லது மகள் அந்த 3 ஆண்டுகளுக்குள் புதுச்சேரியில் தேர்வெழுதி இருக்க வேண்டும்.
அதே ஊழியர் 5 ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கியிருந்தால், அவரது மகள் அல்லது மகன் புதுச்சேரியில் தங்கி படித்து தேர்வு எழுதியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர் 5 ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கி இருந்தால், குடியுரிமை பெற தகுதியாகி விடுகிறார். இந்த விதிமுறைப்படி, தமிழக அல்லது வேறு மாநிலத்தில் குடியுரிமை பெற்ற மாணவர், புதுச்சேரியிலும் குடியுரிமை பெற்று விடுகிறார். அதை பயன்படுத்தி, இரு மாநிலத்திலும் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு விண்ணப்பித்து, எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று விடுகிறார்.புதுச்சேரி குடியுரிமை பெற விண்ணப்பிப்போருக்கு, அதற்குரிய ஆவணங்களை சரி பார்த்து குடியுரிமை சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழகம் அல்லது ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலத்தில் அம்மாநில விதிமுறைகளை பின்பற்றி குடியுரிமை வழங்கப்படுகிறது. இரு மாநில குடியுரிமை பெறும் மாணவர்கள் விவகாரம் இந்தாண்டு பூதா கரமாக வெடித்துள்ளது. இவற்றுக்கு தீர்வு காண முடியாமல், வருவாய்த்துறை திணறி வருகிறது.சென்டாக் விண்ணப் பிக்கும்போதே, மாணவ ரின் ஆதார் கார்டு மட் டும் இன்றி பெற்றோரின் ஆதார் கார்டுகளையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அப்போது, மாணவர் மற்றும் பெற்றோர் வசிக்கும் இடங்களை அடையாளம் காண முடியும். வருவாய் துறையினருக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்க்கும் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்- நமது நிருபர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews