👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களே இல்லாத இரண்டு அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்ற தேர்வு செய்யப்பட்டன. இதில் கே.திரவியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நேற்று முதல் நூலகமாக செயல்படத் தொடங்கியது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 46 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால் அவற்றை மூடும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வாசிப்புத் திறன் மற்றும் பொது அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார்.
இதற்கான அரசாணை வெளி யிடப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடங்களை நூலகத் துறையிடம் ஒப்படைக்க தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது. இந்த 46 பள்ளிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.திரவியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் உள்ள சோலைமலையான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவையும் அடங்கும்.
குலையன்கரிசல் ஊராட்சிக்கு உட்பட்ட கே.திரவியபுரத்திலுள்ள பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாமல் கடந்த சில மாதங்களாக மூடிக் கிடந்தது. சோலைமலையான்பட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மற்றும் ஒரே ஒரு மாணவர் இருந்தார். அவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நூலகமாக மாறியது:
தொடக்க கல்வித் துறை அதிகாரிகளிடம் இருந்து இந்த இரு பள்ளி கட்டிடங்களையும் நூலகத் துறை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. ஏற்கெனவே பள்ளியில் உள்ள பொருட்களை கொண்டு நூலகத்துக்கான தளவாட பொருட்கள் தயார் செய்யப்பட்டன. குலையன்கரிசல் ஊர்ப்புற நூலகத்திலிருந்து முதல் கட்டமாக 500 நூல்கள் கே.திரவியபுரம் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து நேற்று முதல் இப்பள்ளி நூலகமாக செயல்படத் தொடங்கியது. இதை மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை லட்சப்பழம், கால்நடை மருத்துவர் மனோகரன், குலையன்கரிசல் நூலகர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் கூறியதாவது:
கே.திரவியபுரம் நூலகத்துக்கு குலையன்கரிசல் ஊர்ப்புற நூலகத்தின் நூலகர் பொறுப்பு நூலகராகவும், சோலை மலை யான்பட்டி பொது நூலகத்துக்கு விளாத்திகுளம் கிளை நூலகத்தின் நூலகர் பொறுப்பு நூலகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நூலகங்களை நடத்த தினக்கூலி அடிப்படையில் தலா ஒரு பணி யாளரை இருவரும் நியமித்துக் கொள்வர். இந்த நூலகங்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U