முதுநிலை இன்ஜினியரிங்கிலும் குறைந்த மாணவர் சேர்க்கை: 24 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 31, 2019

முதுநிலை இன்ஜினியரிங்கிலும் குறைந்த மாணவர் சேர்க்கை: 24 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் 22,23ம் தேதி தேர்வு நடந்தது. இதன் முடிவு ஜூலை 5ம் தேதி வெளியிடப்பட்டது. கேட் மதிப்பெண், டான்செட் மதிப்பெண் அடிப்படையில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த தேர்வர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக. 22ம் தேதி வெளியிடப்பட்டது. முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 2,198 இடங்கள் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,567 இடங்கள், தனியார் கல்லூரிகள் 11,809 இடங்கள் என மொத்தம் 15,574 இடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கான கேட் மதிப்பெண் அடிப்படையில் 489 பேரும், டான்செட் மதிப்பெண் அடிப்படையில் 47,79 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கலந்தாய்வு 27ம் தேதி கேட் மதிப்பெண் அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள 43 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 25 பேர் சீட் தேர்வு செய்தனர். இந்நிலையில் நேற்றுடன் கலந்தாய்வு முடிந்தது. கலந்தாய்வில் 4 நாட்களில் 3,852 பேருக்கு மட்டுமே சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான 2ம் நாள் கலந்தாய்வில் 3129 பேருக்கு இடம் ஒக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதுநிலை இன்ஜினியரிங் படிக்க 14,201 பேர் டான்செட் தேர்வு ஜூன் 23ம் தேதி நடந்தது. இந்நிலையில் கேட் மதிப்பெண், டான்செட் மதிப்பெண் அடிப்படையில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த தேர்வர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக. 22ம் தேதி வெளியிடப்பட்டது. முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 2198 இடங்கள், அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1167 இடங்கள், தனியார் கல்லூரிகள் 11,809 இடங்கள் என மொத்தம் 15,574 இடங்கள் உள்ளது. இதற்கு கேட் மதிப்பெண் அடிப்படையில் 489 பேரும், டான்செட் மதிப்பெண் அடிப்படையில் 4779 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி கேட் மதிப்பெண் அடிப்படையில் 347 பேருக்கும், டான்சென்ட் மாற்றுத்திறனாளி பிரிவின் கீழ் 9 பேருக்கும் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக டான்சென்ட் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடந்துவருகிறது. முதல் நாளில் 1411 பேருக்கும், 2ம் நாளில் 1362 பேருக்கும் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய கலந்தாய்வில் மீதமுள்ள டான்சென்ட் மாணவர்களுக்கும், எஸ்சி, எஸ்சிஏ பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews