வனக்கல்லுாரி மாணவர்கள் 152 பேர் ரேஞ்சருக்கு தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 24, 2019

வனக்கல்லுாரி மாணவர்கள் 152 பேர் ரேஞ்சருக்கு தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வனச்சரக அலுவலர் (ரேஞ்சர்) பணியிடத்துக்கான தேர்வில் மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில் படித்த 152 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. பி.எஸ்.சி., எம்.எஸ்.சி. வனவியல் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தமான பட்டப்படிப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. ஐ.எப்.எஸ். (இந்திய வனப்பணி) தேர்வுக்கு பாடங்களும் நடத்தப்படுகின்றன.தமிழக அரசு கடந்த இரு மாதங்களுக்கு முன் வனச்சரக அலுவலர்கள் பணிக்கான தேர்வு நடத்தியது. இதில் வனக்கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இக்கல்லுாரியின் டீன் சுரேஷ் கூறியதாவது:மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில் படித்த மாணவர்களில் இதுவரை 115 பேர் ஐ.எப்.எஸ். தேர்ச்சி பெற்று பல்வேறு மாநிலங்களில் பணியாற்றுகின்றனர். 158 வனச்சரக அலுவலர் பணியிடங்களுக்கு தமிழக அரசு கடந்த இரு மாதங்களுக்கு முன் தேர்வு நடத்தியது. இதில் இக்கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 250 பேர் தேர்வு எழுதினர்.இதில் 152 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் ஒரே கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றது இதுவே முதன் முறையாகும்.இந்த மாணவர்களுக்கு உடல் பரிசோதனை நேர்முகத்தேர்வு ஆகியவை முடிந்த பிறகு பணியிடம் ஒதுக்கப்படும். இவ்வாறு டீன் சுரேஷ் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews